இதயம் இதயமே
காதல் வலியா (அ) சுகமா
இன்னைக்கு என் வாழ்க்கையிலே ரொம்ப மோசமான நாள் இன்னைக்கு என்னுடைய காதலிக்காக நைட் 12 மணிக்கு யாரது இல்லாத இந்த இடத்தில் காத்துக்கிட்டு இருக்கேன். அவ வருவாளா என்று ஆனால் வரவில்லை அவளுக்கு பதிலாக என் உயிரையும் என் காதலையும் பறிக்க சில பேர் வந்தார்கள். அவர்களால் நான் அடிப்பட்டு தரையில் விழுந்துட்டேன். அந்த இடம் இருளாக இருந்ததால் நான் ஒரு புதிர் மேல் விழுந்தேன். எனக்கு சில குரல்கள் கேட்டது அவனை விடக்கூடாது. ஒரு சில நொடியில் அவர்கள் என்னை கண்டு பிடித்து விட்டார்கள் இன்று உயிர் போய்விடும் என்று நான் நினைத்தேன்.. அவர்கள் என்னைப் குத்தியது எனக்கு வலிக்கவில்லை யார் என்று தெரியாத ஒரு பெண் என் மீது விழுந்தாள் நான் நான் மயக்கமாகி கொண்டிருந்தேன் அவள் முகமோ சிதைந்தபடி இருந்தது அவள் கண்களில் நான் இறந்துவிட்ட போகிறேன் என்று தவிப்பு. இருந்தது.. என் பாக்கெட்டில் இருந்து போனை எடுத்து அதில் என் அம்மாவுக்கு டயல் செய்து உங்கள் மகன் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கிறார் என்று சொல்லிவிட்டு அவள் மயக்கம்மடைந்தாள். நான் கண்விழித்த போது மருத்துவமனையில் இருந்தேன்
![]() |
Comments
Post a Comment